மெக்சிகோ நாட்டுடனான அமெரிக்க எல்லை, தேவைப்பட்டால் நிரந்தரமாக மூடப்படும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
இருநாட்டு எல்லையில் உள்ள திஜூவானா நகரில் மத்திய அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த அகதிகள் வன்முறையில் ஈடுபட்டதால் பதற்றம் ஏற்பட்டது. இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப், மெக்சிகோ எல்லையில் காத்திருக்கும் அகதிகளை வெளியேற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.
அகதிகள் அனைவரும் கிரிமினல்கள் என்று தெரிவித்துள்ள டிரம்ப், விமானத்திலோ, பேருந்திலோ அவர்களை அனுப்பி வைக்க வேண்டும் என்று மெக்சிகோவை எச்சரித்துள்ளார். அவர்களை அமெரிக்காவுக்குள் அனுமதிக்கக் கூடாது என்று கூறியுள்ள டிரம்ப், தேவைப்பட்டால் எல்லையை மூடப் போவதாகக் குறிப்பிட்டுள்ளார்.