புதுச்சேரியில் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் 4வது நாளாக தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதுச்சேரி அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை எனக்கூறப்படுகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டத்தை கடந்த 25ஆம் தேதி துவக்கினர். இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இந்நிலையில் போராட்டத்தை கைவிட்டு உடனடியாக பணிக்க திரும்ப வேண்டும் என்றும், மீறும் நிரந்தர ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கையும், ஒப்பந்த ஊழியர்கள் பணி நீக்கமும் செய்யப்படுவார்கள் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனாலும் தொழிலாளர்கள் தொடர்ந்து 4 வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.