நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கு உரிய பணம் கிடைக்க, விவசாயிகள் தங்களது சரியான வங்கிக் கணக்கு விவரங்களை கொடுக்குமாறு அமைச்சர் காமராஜ் கேட்டுக்கொண்டார்.
நாகை மாவட்டம் நீலப்பாடி நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை பார்வையிட வந்த உணவுத்துறை அமைச்சர் காமராஜ் செய்தியாளர்களை சந்திக்கையில் இவ்வாறு கூறினார்.