நீலகிரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மத்திய உருளைகிழங்கு ஆய்வு மையத்தை மூடக்கூடாது என பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதி உள்ளார்.
இதுகுறித்து அவர் எழுதி உள்ள கடிதத்தில் , 70 ஆண்டுகளுக்கு முன்னால் அமைக்கப்பட்ட அந்த ஆய்வு மையத்தில் தமிழகம் மட்டுமின்றி தென்மாநில விவசாயிகளும் பயன்பெறுவதாக கூறியுள்ளார். நோய் தாக்குதலுக்கு இலக்காகாத உருளைகிழங்கு விதைகளை உருவாக்கும் இந்த மையத்தை மூட மத்திய விவசாயத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளதை அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
இந்த மையம் மூடப்பட்டால் பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ள ஆய்வு மையத்தை தென்மாநில விவசாயிகள் நாட வேண்டியது இருக்கும் என்றும், ஜலந்தர் ஆய்வு மையம் உருவாக்கும் உருளைக்கிழங்கு ரகம் தென் மாநிலங்களுக்கு ஏற்றதல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.
இதனால் நீலகிரி ஆய்வு மையம் மூடும் முடிவு கைவிட விவசாயத்துறை அமைச்சக்கத்தை பிரதமர் வலியுறுத்த வேண்டுமென முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.