போலீஸ் சீருடையில் மது அருந்திய பெண் காவலர் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார்.
திண்டுக்கல் பழனி அருகே உள்ள சாமிநாதபுரம் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் பெண் காவலர் ஜெய்னூப் நிஷா, போலீஸ் சீருடையுடன் காரில் அமர்ந்து மது அருந்தும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
பெண் காவலர் ஜெய்னூப் நிஷா மது அருந்தும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியானதை தொடர்ந்து அவரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சக்திவேல் உத்தரவிட்டுள்ளார்.