முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் நடத்தும் உண்ணாவிரத போராட்டம் ஒரு கபட நாடகம் என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் தலைமையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க.வினர் மடிப்பாக்கத்தில் உள்ள திருமணமண்டபம் ஒன்றில் வைக்கப்பட்டிருந்தனர். அவர்களை நேரில் சென்று சந்தித்த மு.க.ஸ்டாலின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் தமிழக அரசு மத்திய அரசுக்கு எந்த வித அழுத்தமும் தராததால் தான் தாங்கள் போராட்டம் நடத்துவதாக தெரிவித்தார்.