மதநல்லிணக்கத்துக்கு எதிரான ஆட்சி நாட்டில் நடப்பதாக திமுக மாநாட்டில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதிமாறன் பேசியுள்ளார்.
மாட்டுக்காக மனிதர்களை கொல்லும் நிகழ்வுகள் வடஇந்தியாவில் நடந்து வருவதாகவும் சிறுபான்மையினர் மீது வெறுப்பை உருவாக்கும் அரசியலை பாஜக நடத்திவருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். தமிழ்நாட்டில் காலூன்ற நினைக்கும் பாஜகவின் கனவு பலிக்காது என்று தயாநிதிமாறன் உறுதிபட கூறியுள்ளார். மத்தியில் பாஜக ஆட்சி வந்தவுடன் இந்தி, சமஸ்கிருதம் தமிழகத்தில் திணிக்கப்படுவதாகவும் செம்மொழியான தமிழ் புறக்கணிக்கப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.