திமுகவினர் நேரத்திற்கு நேரம் பச்சோந்தியாக மாறுவார்கள் – ஜெயக்குமார்

திமுகவினர் நேரத்திற்கு நேரம் பச்சோந்தியாக மாறுவார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக குற்றம் சாட்டினார்..
சென்னை பட்டினம்பாக்கம் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறினார்.
மேலும் கமலும் சரி ரஜினியும் சரி எதிர்கட்சிகளும் சரி தங்களை முன்னிலை படுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்காக அவர்கள் கொள்கையை எடுத்துச்சொல்லி பேசுவது ஏற்றுக்கொள்ள் முடியாது என்று கூறிய அமைச்சர்  எங்களை பற்றி பேசினால் தான் அவர்களுக்கு விளம்பரம் கிடைக்கிறது என்று தெரிவித்தார். அரசு சார்பில் எதாவது  குறைகள் இருந்தால் சுட்டிக்காட்டலாம் அதை நாங்கள் எடுத்துக்கொள்வோம் என்றும் அவர் கூறினார். ஆனால் இது போன்ற செயலை யாரும் ஏற்றுக்கொள்ள முடியாது.
வாய் கொடுத்து வம்பில் மாட்டிக்கொள்ள வேண்டாம் என ஜெயக்குமார் அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
உச்சநீதிமன்ற தீர்ப்பு தெளிவாக உள்ள நிலையில் அதை தான் வலியுறுத்தி வருகிறோம் என்றும் காவேரி மேலாண்மை வாரியத்தில் எதுவும் மாறக்கூடாது என்று கூறிய அவர் முறைப்படுத்தும் குழுவும் உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி தான் நடக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
தமிழிசை கருத்துக்கு…தமிழ்நாட்டில் இருந்துக்கொண்டு ஒரு மித்த கருத்தை கூறுவது ஏற்புடையது அல்ல என்று தெரிவித்த அவர்  தமிழ்நாட்டின் நலனை பாதுகாக்கும் கருத்தை கூறுங்கள் என அமைச்சர் ஜெயக்குமார் வேண்டுக்கோள் விடுத்தார்.
திமுக வினர் நேரத்திற்கு நேரம் பச்சோந்தியாக மாறுவார்கள் எனவும் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டினார்.
3 நாட்கள் இருக்கும் போது பொருத்திருந்து பார்ப்போம். என காவேரி மேலாண்மை வாரியம் தொடர்பாக கேள்விக்கு அமைச்சர் பதிலளித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *