அமெரிக்காவில் ஓடும் ரஷ்யன் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டவர்களை மீட்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.
கலிபோர்னியா மாகாணத்தில் ஓடும் ரஷ்யன் ஆற்றுப் படுகையில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஏராளமான வீடுகளும், நூற்றுக்கணக்கான கார்களும் வெள்ளத்தில் முழுமையாக மூழ்கியுள்ளன.
கடுமையான வெள்ளப்பெருக்கு காரணமாக சில இடங்களில் ஆற்றில் 45 அடி உயரத்திற்கு நீர்வரத்து உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், ரஷ்யன் ஆற்றில் 3 குழந்தைகள் உள்பட 5 பேர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். அவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.