இந்தோனேசியாவில் இன்று காலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் மக்கள் அச்சம் அடைந்தனர்.
இந்தோனேஷியாவின் சும்பவா தீவின் கடல் பகுதியில் இன்று காலை 5.29 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6 ஆக பதிவாகி இருந்தது.
சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்களில் அதிர்வு ஏற்பட்டது. இதை உணர்ந்த மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி திறந்த வெளியில் தஞ்சம் புகுந்தனர்.
நிலநடுக்கத்தால் உயிர்சேதமோ, பொருட்சேதமோ ஏற்பட்டதாக தகவல் வெளியாகவில்லை. சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
கடந்தாண்டில் இந்தோனேஷியாவில் நிகழ்ந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் சுமார் 3000 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.