காஷ்மீர் மாநிலத்தில், ஆளுநர் ஆட்சி அமலில் உள்ள நிலையில், உள்ளாட்சி தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.. இதையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, கண்காணிப்புத் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மொத்தமுள்ள ஆயிரத்து 145 வார்டுகளில், முதற்கட்டமாக, 422 வார்டுகளில் நடைபெறும் தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல்முறையாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் மூலம் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது.
மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் தேசிய மாநாட்டு கட்சி ஆகிய இரு முக்கிய கட்சிகளும் இந்த உள்ளாட்சி தேர்தலை புறக்கணித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே இந்த தேர்தலில் பங்கேற்று வாக்களிப்பதை மக்கள் புறக்கணிக்க வேண்டுமென பயங்கரவாதிகள் மற்றும் பிரிவினைவாத அமைப்புகள் வலியுறுத்தி உள்ளனர்.