Me too , You too போன்ற இயக்கங்கள் எல்லாம் பெண்களை அடிமைப்படுத்தும் முயற்சி என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் விமர்சனம் செய்துள்ளார்.
சென்னை தியாகராய நகரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் அவர் ஆயுதபூஜை கொண்டாடினர். பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய தமிழிசை, me too விவகாரத்தில் அக்பர் வழக்கு தொடர்ந்திருப்பதாகக் குறிப்பிட்ட தமிழிசை, கவிஞர் வைரமுத்துவுக்கு அந்த துணிச்சல் இல்லை என்று விமர்சித்தார்.