தென்கிழக்கு ஆசிய நாடான வியட்நாம் பகுதியில் உருவாகிய தாம்ரே புயலால் அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் மழைநீர் வீடுகள், குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்தது. புயலால் ஏராளமான வீடுகளின் கூரைகள், மரங்கள், மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன. பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தாம்ரே புயல் கரையை கடந்த நிலையில் இதுவரை 27 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
2017-11-06