கர்நாடக அணைகளில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் கரையோர மக்களுக்கான வெள்ள எச்சரிக்கை தொடர்ந்து வருகிறது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை வெளுத்துவாங்குவதால், கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் முழு கொள்ளளவை எட்டிவிட்டன. இதனால், அந்த அணைகளுக்கு வரும் நீர் அப்படியே காவிரி ஆற்றில் வெளியேற்றப்படுகிறது. தற்போது நீர் வெளியேற்றம் படிப்படியாக குறைக்கப்பட்டு வருவதால், ஒகேனக்கலுக்கு வரும் நீரின் அளவும் குறைந்துள்ளது. தற்போது, ஒகேனக்கலுக்கு வினாடிக்கு ஒரு லட்சத்து 15 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
தற்போது மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டிவிட்டதால், அணைக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. சுரங்கம் வழியாக 25 ஆயிரம் கன அடி நீரும், 16 கண் மதகு வழியாக ஒரு லட்சம் கன அடிநீரும் வெளியேற்றப்படுகிறது.