தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வெளியிட்டுள்ள தீபாவளி வாழ்த்து செய்தியில், அறியாமைக்கு எதிரான ஞானத்தின் வெற்றி, சுயமுன்னேற்றம், அகந்தையை அகற்றுதல், வெறுப்புணர்வை குறைத்தல் ஆகியவற்றை தீபாவளி குறிக்கிறது என்று தெரிவித்துள்ளார். மேலும் தீபங்களின் திருநாள் தீமைக்கு எதிரான வெற்றியை கொண்டு வருகிறது என்று கூறிய அவர், தீபாவளி சகோதரத்துவ உணர்வை வலுப்படுத்துவதாகவும், தூய்மையான முன்னேற்றம் அடைந்த இந்தியாவை உருவாக்க வழிநடத்தும் என்றும் கூறியுள்ளார்.
மரம் வீழ்ந்து அறம் வென்ற நாளாகவும் தீமைகள் அழிந்து நன்மைகள் பெருகிடும் நன்னாளாகவும் தீபாவளி திகழ்கிறது என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், தித்திக்கும் தீபாவளி திருநாளில் அனைவரது வாழ்விலும் நலமும் வளமும் பெருகட்டும் என்றும் இருள் அகன்று மகிழ்ச்சி ஒளிச்சுடர் பரவட்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுகரசர், தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் உள்ளிட்டோரும் தங்களது தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.