மேற்கு மத்திய வங்க கடல் பகுதிகள் மற்றும் கேரள கடற்கரை பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை நகரின் சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
2017-09-30