பிரம்மோற்சவத்தின் ஏழாவது நாளில் சந்திரபிரபை வாகனத்தின் மீது வெண்னை திண்னும் கிருஷ்ணர் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி நான்கு மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். சூரியன் அக்னி வடிவம், சந்திரன் சாந்த வடிவம் என்பதால் இரண்டும் தனது அம்சமே என்னும் விதமாக சூரியன் மற்றும் சந்திர வாகனத்தில் சுவாமி வீதிஉலா நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா முழக்கத்துடன் தரிசனம் செய்தனர். சுவாமி வீதி உலாவில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பக்தர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.
2017-09-30