சென்னையிலும், தேனி உள்ளிட்ட சில மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்துள்ளது.
சென்னையில் நேற்றிரவு பல்வேறு இடங்களில் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளுமையான சூழல் நிலவியது. இதனால் மக்கள் புழுக்கத்தில் சிக்கி தவித்த மக்கள் நிம்மதி அடைந்தனர்.
தேனி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்றிரவு கனமழை பெய்த தால் வாகன போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டது.
திருவள்ளூரிர், ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், பொன்னேரி, செங்குன்றம்,மாதவரம் உள்ளிட்ட பகுதிகளிலும்,
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் மழை பெய்துள்ளது.