சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டதால், பணப்பட்டுவாடாவைத் தடுக்க காவல்துறையினர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் விடிய விடிய தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால், கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. வாகனங்கள் தீவிர சோதனைக்குப் பின்னரே ஆர்.கே.நகருக்குள் செல்ல அனுமதிக்கப்படுகின்றன. இந் நிலையில் நேற்றிரவு எஸ்.என்.செட்டி தெரு, வைத்தியநாதன் பாலம், இளையமுதலி தெரு, ஐ.ஓ.சி. பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட பல இடங்களில் காவல்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.