சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் நாளை முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வேட்பாளர் குறித்து முடிவு செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் டிசம்பர் 21-ம் தேதி நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனைதொடர்ந்து ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக சார்பில் மருதுகணேஷ் போட்டியிடுவார் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நாளை முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாகவும், இக்கூட்டத்தில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வேட்பாளர் குறித்து முடிவு செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.