பாதுகாப்பு சோதனையில் டாடா நிறுவனத்தின் நெக்சான் கார் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்றதற்கு மகிந்திரா நிறுவன தலைவர் ஆனந்த் மகிந்திரா பாராட்டு தெரிவித்துள்ளார்.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் எஸ்யூவி தயாரிப்பான நெக்சான் கார், பாதுகாப்பு சோதனையில் இதுவரை எந்த இந்திய தயாரிப்பு நிறுவன காரும் பெற்றிராத 5 ஸ்டார் ரேட்டிங் பெற்றுள்ளது. இது உலக அளவில் இந்திய நிறுவன தயாரிப்பின் பெருமையை பறைசாற்றும் விதத்தில் அமைந்துள்ளது.
இந்த சாதனைக்காக போட்டி நிறுவனமான மகிந்திரா நிறுவன தலைவர் ஆனந்த் மகிந்திராவும் டுவிட்டரில் பாராட்டு தெரிவித்துள்ளார். மகிந்திரா நிறுவனத்தின் எஸ்யூவி தயாரிப்பான மராசோ கார் பாதுகாப்பு சோதனையில் 4 ஸ்டார் ரேட்டிங் பெற்றது குறிப்பிடத்தக்கது.