வகுப்பறையில் பேசிய குழந்தைகளின் வாயை ஒட்டிய ஆசிரியை

அரியானா மாநிலத்தில் வகுப்பில் பேசிக் கொண்டிருந்த எல்கேஜி குழந்தைகளின் வாயை டேப் போட்டு ஒட்டிய ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அந்த மாநிலத்தின் குருகிராமில் பள்ளி ஒன்றில் எல்கேஜி வகுப்பு நடந்து கொண்டிருந்தது. வகுப்புக்கு இடையூறு செய்யும் வகையில் பேசிக் கொண்டிருந்ததால், ஒரு மாணவன் மற்றும் மாணவிக்கு ஆசிரியை ஒருவர் டேப் கொண்டு வாயை ஒட்டிய காட்சிகள் வெளியாகின.

பெற்றோர் அளித்த புகாரின் பேரில் ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். குழந்தைகள் பேசக்கூடாத தவறான வார்த்தைகளைப் பயன்படுத்தியதால் அது தவறு என புரியவைக்கும் வகையில் டேப் போட்டு ஒட்டியதாக அந்த ஆசிரியை தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *