அமெரிக்காவும், வடகொரியாவும் பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலம் தங்களுக்கு இடையேயான வேறுபாடுகளை களைய முற்பட வேண்டும் என சீன அதிபர் ஜி ஜின்பிங் வலியுறுத்தியுள்ளார்.
சிங்கப்பூரில் அமெரிக்க – வடகொரிய அதிபர்களின் சந்திப்புக்குப் பின் இரு நாடுகளுக்கிடையே இணக்கமான சூழல் ஏற்பட்டது எனினும் அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை நீக்காவிட்டால் வடகொரியா மீண்டும் அணு ஆயுத சோதனைகளில் ஈடுபட நேரிடும் என கிம்ஜோங் உன் தெரிவித்ததையடுத்து இரு நாட்டு உறவுகளில் பின்னடைவு ஏற்பட்டது. இந்நிலையில் சீனா வந்த வடகொரிய வெளியுறவு அமைச்சர் ரி யாங் ஹோவிடம் (Ri Yong Ho) வடகொரியா அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த சீன அதிபர் ஜி ஜின்பிங் வலியுறுத்தியதாக சீன வெளியுறவுத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.