பெரம்பூரில் தயாரிக்கப்பட்ட எஞ்சின் இல்லாத டிரெயின்18 ரயில் நாளை வெள்ளோட்டம்

இந்தியாவில் எஞ்சின் இல்லாத டிரெயின் 18 ரயிலின் முதல் வெள்ளோட்டம் உத்தரப் பிரதேசத்தின் பரேய்லி – மொரதாபாத் இடையே நாளை நடைபெற உள்ளது.

சென்னை பெரம்பூர் ரயில்பெட்டித் தொழிற்சாலையில் முதன்முறையாக எஞ்சின் இல்லாத டிரெயின் 18 என்கிற ரயில் தயாரிக்கப்பட்டுள்ளது. மணிக்கு 160கிலோமீட்டர் வேகத்தில் ஓடும் திறன்பெற்ற இந்த ரயில் தண்டவாளத்தில் இயக்கி வெள்ளோட்டம் பார்ப்பதற்காக ஆராய்ச்சி வடிவமைப்பு தர நிறுவனத்திடம் கடந்த மாத இறுதியில் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில் உத்தரப் பிரதேசத்தில் பரேய்லி – மொரதாபாத் இடையில் உள்ள தண்டவாளத்தில் இந்த ரயிலை இயக்கி நாளை வெள்ளோட்டம் பார்க்க உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *