கேமரூனில் பிரிவினைவாதிகளால் கடத்தப்பட்ட 79 பள்ளி மாணவ, மாணவிகள் விடுவிக்கப்பட்டுவிட்டதாக, அந்நாட்டு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கேமரூனில் பிரெஞ்சு ஆட்சி மொழியாக இருக்கும் நிலையில், ஆங்கிலம் பேசும் வடமேற்கு மற்றும் தென்மேற்கு பகுதிகளை தனிநாடாக்கக் கோரி ஆம்பாசோனியா பிரிவினைவாதிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்கள் கடந்த வாரம் பிரஸ்பைடேரியன் ((Presbyterin)) என்ற பள்ளியில் இருந்து 79 மாணவ, மாணவிகளை கடத்திச் சென்றனர்.
இதையடுத்து, மாணவ, மாணவிகளை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்றது. ஆனால், பிரிவினைவாதிகள் அவர்களாகவே, மாணவ, மாணவிகளை விடுவித்துவிட்டதாக, கேமரூன் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.