மத்திய அமைச்சர்கள், தமிழக அரசின் திட்டங்களை தங்களின் திட்டங்கள் போல சொல்வதாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியுள்ளார்.
கோவை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசு தமிழகத்திற்கு தரவேண்டிய 18 ஆயிரம் கோடி ரூபாய் நிலுவையில் உள்ளதாகவும், அந்த தொகையை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பெற்று தரவேண்டும் வேண்டும் என்றும் கூறினார்.