வடசென்னை திரைப்படத்தின் இயக்குநர் வெற்றிமாறன் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. சமூகநீதிக்கான வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவரான சார்லஸ் அலெக்சாண்டர் அளித்துள்ள இந்தப் புகாரில், வடசென்னை திரைப்படத்தில் சமூக அக்கறையின்றி பல்வேறு தரப்பினரை புண்படுத்தும் வகையில் பல ஆபாச வார்த்தைகள் இடம்பெற்றிருப்பதாக கூறப்பட்டுள்ளது.
சமூகத்தை சீரழிக்கும் வகையில் அமைந்துள்ள இந்த திரைப்படத்தை இயக்கிய வெற்றிமாறன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. நடவடிக்கை எடுக்கப்பட்டால்தான், சமூகத்தை சீரழிக்கும்விதமான திரைப்படங்கள் இனிமேல் வெளிவராது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புகாரைப் பெற்றுக் கொண்ட உளவுத்துறை துணை ஆணையர் விமலா, நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததாக சார்லஸ் அலெக்சாண்டர் செய்தியாளர்களிடம் கூறினார்.