அரக்கோணம் அருகே கணவரை இழந்து மகனுடன் வசித்த பெண் கொலை.

வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே கணவரை இழந்த பெண் கொல்லப்பட்டு, நிர்வாண நிலையில் உடல் கிடந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குருவராஜப்பேட்டை, காந்தி நகரைச் சேர்ந்த செல்வி என்பவர், கணவர் இறந்துவிட்ட நிலையில், 6 வயது மகனுடன் தனியே வசித்து வந்துள்ளார்.

தனியார் ஆயத்த ஆடை நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளார். இன்று காலை செல்வியின் உடல் அவரது வீட்டிலேயே நிர்வாண நிலையில் கிடந்தது குறித்து தகவலறிந்த அரக்கோணம் கிராமிய போலீசார் நிகழ்விடத்துக்கு சென்றனர்.

செல்வி பாலியல் பலாத்காரம் செய்த நபர், அவரை கொலை செய்து விட்டு தப்பியிருக்கக்கூடும் என போலீசார் சந்தேகிக்கின்றனர். செல்வியின் கழுத்தில் காலால் மிதித்து கொன்றிருப்பதாக அவர்கள் கூறினர். உடலை பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிய போலீசார், கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *