மறைந்த அப்துல் கலாமின் 87வது பிறந்த நாள் தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் மற்றும் கலாமின் குடும்பத்தினர் அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.
ராமேஸ்வரம் அருகே உள்ள பேய்க்கரும்பில் அமைந்துள்ள கலாம் நினைவிடத்தில் அவரது சகோதரர் முத்து மீரான் மரைக்காயர் மற்றும் குடும்பத்தினர் இஸ்லாமிய முறைப்படி சிறப்பு துவா நடத்தினர்.
அதனை தொடர்ந்து அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் கலாமின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தினார். அதே போல் பொதுமக்கள் பள்ளி மாணவ மாணவியர் என ஏராளமானோர் கலாமின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.