ஊழலை ஒழிப்பது மக்களின் கையில் தான் உள்ளது என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள பாவை பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார். அப்போது பேசிய கமலிடம் முதலமைச்சரானால் முதல் கையெழுத்து எதற்காக போடுவீர்கள் என்று மாணவர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த அவர், லோக் ஆயுக்தாவுக்கு முதல் கையெழுத்து போடப்படும் என்றார். அனைவரும் நல்லவர்களாக மாறினால் மட்டுமே ஊழல் ஒழியும் என்றும் அவர் பதில் அளித்தார்.