திருச்சி விமானநிலையத்தில் தங்கக் கடத்தல் புகார் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் 3-மணி நேரத்திற்கும் மேலாக விமானநிலைய அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தினர்.
திருச்சி விமான நிலையத்தில் கடந்த சில மாதங்களாக வெளிநாடுகளிலிருந்து தங்கம் கடத்தி வருவது அதிகரித்து வருகிறது. மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளின் தொடர் சோதனையால், பல கிலோ தங்கம் மற்றும் வெளிநாட்டு கரன்சிகள், பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இந்த தங்க கடத்தலில் விமான நிலைய ஊழியர்களுக்கு தொடர்பு இருப்பதாக தெரியவந்த நிலையில், சிபிஐ போலீசார் அதிரடி ஆய்வில் இறங்கியுள்ளனர். கடந்த 4 தினங்களுக்கு முன்பு நடைபெற்ற தங்கம் கடத்தலில் மலிண்டோ விமான நிறுவனத்தைச் சோ்ந்த ஊழியா்கள் இருவரும், தனியார் பயணிகளின் உடைமைகளை கையாளும் நிறுவனத்தைச் சோ்ந்த 2 போ் என 4 போ் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதனிடையே தங்க கடத்தலை தவிர்க்கவும், தடுக்கவும், சென்னையில் இருந்து வந்த 12 பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகள் விமானநிலையத்திற்குள் சென்று ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர்.