கோவை – மருதமலையில் கோயிலுக்குச் செல்லும் படிக்கட்டுகளில் காட்டுயானைகள் கடந்து செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மருதமலையில் சுப்பிரமணியசுவாமி கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலுக்குச் செல்ல அமைக்கப்பட்டுள்ள படிக்கட்டுகளின் இருபுறமும், மரங்கள் அடர்ந்த வனப்பகுதி அமைந்துள்ளது. இந்நிலையில், நேற்று காட்டுயானைகள் இந்தப் படிக்கட்டுகளை கடந்து சென்றன.
ஆனைகட்டி பகுதியில் இருந்து வரும் யானைகள், மருதமலை முருகன் கோவில் படிக்கட்டுகளின் குறுக்கே கடந்து தொண்டாமுத்தூர் வனப்பகுதிக்கு செல்கின்றன. இதனால், பக்தர்கள் கவனமாக இருக்குமாறு கூறியுள்ள வனத்துறையினர், யானைகளின் வருகை குறித்து சைரனும் பொருத்தியுள்ளனர்.