நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் தார்சாலையில் திடீர் பள்ளங்கள்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் தார்சாலையில் திடீர் பள்ளங்கள் ஏற்பட்டிருப்பதால் பொதுமக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

எல்.ஜ.சி பகுதியில் 3 கோடி ரூபாய் மதிப்பில் தார்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், ராசிபுரம் – நாமக்கல் சாலையின் 2 இடங்களில் திடிரென பள்ளம் ஏற்பட்டது. இதையடுத்து, விபத்துகள் ஏற்படுவதை தடுக்க சாலையில் தடுப்புகள் வைக்கப்பட்டன. அப்பகுதி வழியாக செல்லும் வாகனங்களுக்கு மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. தரமற்ற பொருட்களால் தார்சாலை பணிகள் மேற்கொள்ளப்படுவதே பள்ளத்திற்கு காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *