புதுடில்லி: நாடு முழுவதும் போக்குவரத்து தேவை அதிகரித்து வருவதால், சாலை மற்றும் விமான போக்குவரத்தை இணைக்கவும், நீர் வழித்தடங்களை போக்குவரத்திற்கு பயன்படுத்தவும், மத்திய அரசு வேகம் காட்டி வருகிறது. குறிப்பிட்ட சில திட்டங்களை, இந்த ஆண்டிற்குள் துவக்கவும், மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.
நாடு முழுவதும், வாகன பெருக்கம் அதிகரித்து வருவதாலும், போக்குவரத்து தேவை உயர்ந்து வருவதாலும், பெரும் நெருக்கடி ஏற்பட்டு வருகிறது.போக்குவரத்து வசதிகளை அதிகரிக்கும் அதேசமயம், சுற்று சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில், அவை அமைந்து இருப்பதை, மத்திய அரசு உறுதி …