தஞ்சை கல்லணை கால்வாய் ஆற்றில் கழிவுகள் கலப்பதால் சாக்கடையாக மாறியுள்ளது. ஆங்கிலேயர்களின் ஆட்சிக் காலத்தில் தஞ்சை நகரின் மையப்பகுதியில் கல்லணைக் கால்வாய் வெட்டப்பட்டது.
இதன் மூலம், தஞ்சை,பட்டுக்கோட்டை, புதுக்கோட்டை, நாகை மாவட்டங்களில் 3 லட்சம் ஏக்கர் நிலம் பாசனவசதி பெறுகிறது. மேட்டூர் அணையிலிருந்து நீர் வரத்து குறைந்ததாலும், போதிய மழை இல்லாததாலும் இந்த ஆறு வற்றியுள்ளது.
ஆற்றின் கரையில் அமைந்துள்ள மிகப்பெரிய வணிக நிறுவனங்கள், மருத்துவமனைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் இருந்து கழிவுகள் ஆற்றில் கலப்பதால் சாக்கடையாக மாறியுள்ளது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.