எஸ்.வி.சேகரை கைது செய்யாததை கண்டித்து கோவையில் பத்திரிக்கையாளர்கள் போராட்டம்

பெண் பத்திரிக்கையாளர்களை இழிவாக விமர்சித்த எஸ். வி. சேகர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, கோவையில் பத்திரிகையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எஸ்.வி. சேகரை கைது செய்ய வலியுறுத்தி, கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் ஏற்கனவே பத்திரிகையாளர்கள் புகார் அளித்திருந்தனர். அதன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி, இன்று கோவை மாவட்ட பத்திரிகையாளர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்துக்கு பத்திரிகையாளர்கள் சென்றனர். அங்கு எஸ்.வி. சேகரை கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அவர்கள் முறையிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *