ஆஸ்திரேலியாவில் அடுத்த மாதம் நடைபெற உள்ள காமன்வெல்த் விளையாட்டுப் போட்டித் தொடக்கவிழாவில் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து இந்திய அணிக்குக் கொடியேந்தித் தலைமையேற்றுச் செல்லவிருக்கிறார். ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்டில் ஏப்ரல் 4 முதல் 15வரை காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி நடைபெற உள்ளது.
இந்தப் போட்டியின் தொடக்கவிழாவில் இந்தியக் குழுவினருக்குத் தலைமை தாங்கிக் கொடியேந்திச் செல்லும் பொறுப்பு பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துக்கு வழங்கப்பட்டுள்ளது. 2014ஆம் ஆண்டு கிளாஸ்கோவில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் துப்பாக்கி சுடும் வீரர் விஜய்குமார் இந்திய அணிக்குத் தலைமையேற்றுச் சென்றார்.