கடைசி பந்தில் வெற்றி பெறப் போவதை மனதில் உறுதி செய்து விட்டேன் – தினேஷ் கார்த்திக்

வங்கதேசத்துக்கு எதிரான இறுதிப் போட்டியில் அமைதியான மனநிலையிலேயே விளையாடியதாக தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

சென்னை சேப்பாக்கத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய தினேஷ் கார்த்திக், இந்திய அணியில் சிறப்பான வீரர்கள் பலர் இருப்பதால், அதில் இடம்பிடிப்பது கடினமான காரியம் என்றும், எனவே ஒவ்வொரு இன்னிங்சும் முக்கியம் என்று தெரிவித்தார்.

முதல் சிக்ஸ் அடித்த பின்னர் சங்கிலி தொடர் போல் ரன் குவித்ததாகவும், கடைசி பந்தை வங்கதேச வீரர் வீசுவதற்கு ஓடி வரும்போதே வெற்றி பெறப் போவதை மனதில் உறுதி செய்து விட்டதாகவும் கூறினார். சென்னையைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் சிறப்பாக பந்துவீசுவதாகவும் பாராட்டு தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *