காஞ்சிபுரம் படப்பை அருகே இரும்புக்கடை குடோனில் பயங்கர தீ விபத்து

தாம்பரம் – வாலாஜாபாத் சாலையில் படப்பை அருகே ஆரம்பாக்கத்தில் உள்ள பழைய பொருட்கள் கடையில் அட்டைப்பெட்டிகள், தாள்கள், பிளாஸ்டிக் ஆகியவை குவித்து வைக்கப்பட்டிருந்தது. இவற்றில் திடீரெனப் பற்றிய தீ, அருகில் உள்ள மற்றொரு கடைக்குப் பரவி சென்ட்ரிங் பொருட்கள், கழிவு ஆயில் ஆகியவற்றில் தீப்பிடித்து எரிந்தது. இதனால் அப்பகுதியில் புகை மூட்டம் பரவியதால் தாம்பரம் – வாலாஜாபாத் சாலையில் அரைமணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் ஒரகடம், திருப்பெரும்புதூர், தாம்பரம், ஊரப்பாக்கம் ஆகிய ஊர்களில் இருந்து தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்தத் தீவிபத்தில் பலலட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமடைந்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *