நியூசிலாந்தில் நடைபெற்ற ஜூனியர் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா நான்காவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனைப் படைத்துள்ளது. மேலும் இந்த தொடரில் இந்தியா தோல்வியை சந்திக்காமல் கோப்பையை கைப்பற்றியுள்ளது. இதனையடுத்து ஜீனியர் இந்திய அணி வீரர்களுக்கு தலா 30 லட்சம் ரூபாயும், தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு 50 லட்சம் ரூபாயும், அணியின் ஆதரவு ஊழியர்களுக்கு தலா 20 லட்சம் ரூபாயும் பரிசாக வழங்கப்படும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.
2018-02-04