2017ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் எஸ்எஸ் 520 என்கிற ராக்கெட்டை ஜப்பான் விண்வெளி ஆராய்ச்சி முகமை விண்ணில் ஏவியது. தகவல் தொடர்பில் உள்ள கோளாறு காரணமாக அந்த ராக்கெட் மீண்டும் புவிக்குத் திரும்பி வந்தது. இதனால் 10மீட்டர் நீளம், 50செண்டிமீட்டர் விட்டம் கொண்ட அந்த ராக்கெட்டை மீண்டும் மேம்படுத்தி அதில் 3கிலோ எடையுள்ள மிகச் சிறிய செயற்கைக் கோளைப் பொருத்தினர். இந்த ராக்கெட் உச்சினூரா விண்வெளி ஏவுதளத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இந்தச் செயற்கைக் கோள் படக்கருவி மூலம் புவிப் பரப்பைத் துல்லியமாகப் படம்பிடித்து அனுப்பும் திறன் பெற்றதாகும்.
2018-02-04