ஸ்பெயின் நாட்டின் மன்னர் ஆறாம் ஃபிலிப் அவரது 50வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இதையடுத்து மாட்ரிட் நகரில் மன்னர் குடும்பத்தின் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மன்னர் ஆறாம் ஃபிலிப், தமது 12 வயது மகளான லியோனாரை இளவரசியாக அறிவித்துள்ளார். இளவரசியாக அறிவிக்கப்பட்டதன் மூலம் லியோனார் ராணி ஆவதற்கான முதல் படியை எட்டியுள்ளார். இந்நிலையில் நாட்டின் இளவரசியாக அறிவிக்கப்பட்டுள்ள லியோனார்க்கு அரச குடும்பத்தினர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அந்நாட்டு மக்களும் தங்களின் வருங்கால ராணிக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இதனிடையே சமீபத்தில் வரி ஏய்ப்பு புகாரில் சிக்கிய மன்னர் ஆறாம் ஃபிலிப்பின் சகோதரியான இளவரசி கிறிஸ்டினாவின் இளவரசி பட்டம் பறிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
2018-02-01