இந்த ஆண்டின் தொடக்கத்தில் அமெரிக்க நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், தீவிரவாத குழுக்களின் சவால்களை சந்திக்கவும், சீனா, ரஷியாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ளவும், அவர்களுக்கு இணையாக நமது அணு ஆயுத பலத்தை அதிகரிக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார். மேலும் தமது நாட்டின் தற்காப்புக்காக அணு ஆயுத தயாரிப்பை நவீனப்படுத்தி மறுகட்டமைப்பு செய்ய வேண்டும் என்றும் ராணுவ செலவினங்களுக்கான உச்சவரம்பை கருத்தில் கொள்ளாமல் இதற்கு தேவையான நிதியை முழுமையாக ஒதுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
2018-02-01