ஏமன் தலைநகரில் தீவிரவாதிகளை ஒடுக்குவதாகக் கூறி சவூதி அரேபியா, அமெரிக்கா இணைந்த கூட்டுப்படைகள் அடிக்கடி விமானம் மூலம் குண்டுவீசித் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்நிலையில் சவூதி அரேபிய, அமெரிக்கக் கூட்டுப்படையினர் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அடைக்கப்பட்டிருந்த சிறைச்சாலை மீது விமானம் மூலம் குண்டுவீசித் தாக்குதல் நடத்தினர். இதில் 39பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
2017-12-14