இலங்கை அணி மூன்று டெஸ்ட் தொடர், 3 ஒருநாள் போட்டிகள், 3 டி-20 போட்டிகளில் விளையாட இந்தியா வந்துள்ளது. இதில் கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி சமநிலையில் முடிந்தது. இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் தொடர் நாக்பூரில் இன்று தொடங்குகிறது. கொல்கத்தாவைப் போலவே, ஆடுகளம் பசுமையாக இருப்பதால், வேகப்பந்து வீச்சாளர்களுக்கு நாக்பூர் சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சொந்த காரணங்களுக்காக புவனேஸ்குமார் மற்றும் தவான் இந்த தொடரில் பங்கேற்கவில்லை.
2017-11-24