தமிழ் கலாச்சாரத்தை பறைசாற்றும் வகையில் சென்னையை கலாச்சார நகரமாக யுனெஸ்கோ அறிவித்துள்ளதாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார்.
சென்னை மயிலாப்பூரில் உள்ள பாரதீய வித்யா பவன் அரங்கில் பவன் கலாச்சாரத் திருவிழாவை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். இசைக்கலைஞர் கத்ரிகோபால்நாத், நடனக் கலைஞர் ஷைலஜா உள்ளிட்டோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதையும் ஆளுநர் வழங்கினார். பின்னர் இவ்விழாவில் பேசிய பன்வாரிலால் புரோகித், யுனஸ்கோவில் தமிழ் கலாச்சாரத்திற்கு சிறப்பான இடம் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் இருப்பதில் பெருமை கொள்வதாகவும் ஆளுநர் கூறினார்.