பசிபிக் பெருங்கடலின் மேற்கே உருவான டாம்ரே புயலால் வியட்நாமில் கனமழை கொட்டி தீர்த்தது. காற்றும் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. அத்துடன் மணிக்கு 90 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியதால் வீடுகளின் மேற்கூரைகள் தூக்கி வீசப்பட்டன. மரங்களும், மின்கம்பங்களும் அடியோடு சாய்ந்து விழுந்தன. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. இந்த புயலில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது. 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் மீட்பு குழுவினர் முடுக்கிவிடப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் படகு மூலம் மீட்கப்பட்டு வருகின்றனர்.
2017-11-07