சென்னை எழும்பூரில் உள்ள ஃபைஸ் மஹாலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் இஸ்லாமிய ஜனநாயக பேரவை சார்பில், 2வது நாளாக இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டார். மேலும், இந்நிகழ்ச்சியில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் இஸ்லாமியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.