தமிழக மீனவர்கள் மீதான துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் விரைவில் போராட்டம் ; எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அறிவிப்பு

தமிழக மீனவர்கள் மீது இந்திய கடலோர காவல்படை துப்பாக்கிச்சூடு நடத்தியதை கண்டித்து, ராமேஸ்வரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் விரைவில் போராட்டம் நடத்தப்படும் என்று எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலையில் தமிழ்ச் சங்கம் சார்பில் தமிழகப் பெருவிழா நடைபெற்றது. இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டார். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக மீனவர்கள் மீது இந்திய கடலோர காவல்படை தாக்குதல் நடத்தியது அதிர்ச்சியளிப்பதாகவும், மீனவர்களின் மீதான தாக்குதலை கண்டித்து ராமேஸ்வரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் விரைவில் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.

பேரறிவாளன் உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்வது குறித்து முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி கே.டி.தாமஸ் எழுதிய கடிதம் குறித்து அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி பரிசீலனை செய்ய வேண்டும் என்றும், நளினிக்கு தமிழக அரசு பரோல் அனுமதி வழங்க வேண்டும் என்றும் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *