ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் தலைமையிலான அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டிருப்பதால் அங்கு மீண்டும் தேர்தல் நடத்தப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

ஜெர்மனியில் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலில் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கலினின் பழமைவாத கிருஸ்துவக் கட்சி 33 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றது. இருப்பினும் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை பலம் கிடைக்காததால் எப்.டி.பி. கட்சியுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்நிலையில் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது. இதனால் ஜெர்மனி அதிபர் ஃபிராங்க் வால்டரை சந்தித்து பிரதமர் ஏஞ்சலா மீண்டும் புதிதாக தேர்தல் நடத்த கோர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *